அமைச்சரவை மாற்றம் குறித்து ஜே.வி.பி கட்சி அதிருப்தியை வெளியிட்டுள்ளது. உள்நோக்கத்துடன் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சுகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய வெளிவிவகார அமைச்சர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை தமது அமைச்சின் கீழ் கோரியுள்ளதாகத் தெரிய வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment