இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆயுதத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், புனே அருகில் உள்ள காத்கி பகுதியில் உள்ள இராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் இன்று காலை தொழிலாள்hகள் வெடிபொருள்களை இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெடிவிபத்தில் படுகாயம் அடைந்துள்ள இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் வெடி விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment