Home உலகம் அமெரிக்க சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய விளையாட்டு வீரர் குற்றத்தை ஏற்றார்…

அமெரிக்க சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய விளையாட்டு வீரர் குற்றத்தை ஏற்றார்…

by admin


அமெரிக்காவில் 12 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டு உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க், சரனாக்லேக் பகுதியில் நடைபெற்ற உலக பனி ஷூ விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் தன்வீர் குசைன் கடந்த பெப்ரவரி மாதம் சென்றார்.

அங்கு அவர் கடந்த பெப்ரவரி மாதம் 27-ந் திகதி 12 வயது சிறுமி ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் காவற்துறையில் முறைப்பாடு செய்தனர். அதன்பேரில் அவர் மார்ச் 1-ந் திகதி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது எசெக்ஸ் கவுண்டி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின்போது அவர் தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி அந்த நீதிமன்றின் அரசு தரப்பு துணை சட்டத்தரணி கிறிஸ்டி ஸ்பிராக் விடுத்துள்ள அறிக்கையில், “சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான குற்றச்சாட்டை தன்வீர் உசேன் ஒப்புக்கொண்டு விட்டார். அதை பிரமாண வாக்குமூலமாக அளித்துள்ளார்” என கூறியுள்ளார். அவரது விசா கடந்த ஓகஸ்டு மாதமே காலாவதியானது.

அவரது தாயார் உடல் நலக்குறைவால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அவரது சகோதரியின் திருமணமும் ஒத்தி போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அவர் நீதிமன்றில் செய்துகொண்ட குற்ற உடன்படிக்கையின்படி தண்டிக்கப்படாமல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன. எனினும் அதற்கு சிறிது காலம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More