Home இலங்கை 100 கிராம் குடுவோடு காவல்துறைஉத்தியோகஸ்தர் உட்பட இருவர் கைது

100 கிராம் குடுவோடு காவல்துறைஉத்தியோகஸ்தர் உட்பட இருவர் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 100 கிராம் ‘குடு’ போதைப் பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பூநகரி காவல் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் உட்பட இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பூநகரி காவல் பிரிவில் முச்சக்கரவண்டியில் பயணித்த போதே குறித்த காவல்துறை  உத்தியோகத்தரும் முச்சக்கரவண்டிச் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தமிழ் காவல்துறை உத்தியோகத்தர், சாவகச்சேரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருட்டு வழக்கு ஒன்றின் சான்றுப் பொருளான தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை விற்றிருந்தார்.  அது தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் அவர் சேவையில் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் பத்திரிகை அலுவலகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அத்துமீறி நுழைந்து ஒளிப்படம் எடுத்தார் என்றும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது என  காவல்துறையினர்; மேலும் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More