Home இலங்கை இலங்கையின் அரசியல் நெருக்கடி -ஆசியாவின் பழைமைவாய்ந்த ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனை….

இலங்கையின் அரசியல் நெருக்கடி -ஆசியாவின் பழைமைவாய்ந்த ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனை….

by admin

இலங்கையின் தலையெழுத்தை, மூடிய அறைக்குள் சில முதியவர்கள் இணைந்து தீர்மானிக்கின்றனர் என  ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவர் ஜயத்மா விக்ரமநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார்.   ஆசியாவின் பழைமைவாய்ந்த ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனையாக, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி அமைந்துள்ளதென  அவர் தனது கடுமையான விமர்சனத்தை ருவிட்டர் பதிவில் முன்வைத்துள்ளார்.

தற்போதைய நிலையில், நாட்டின் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அரசியல் தலைவர்கள் செயற்படுவது அவசியமென வலியுறுத்தி உள்ள  ஐ.நா. தூதுவர் ஜயத்மா, குறிப்பாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச்­செ­ய­லாளர் அன்­டோ­னியோ  குட்டரஸ் , இளைஞர் விவ­கா­ரங்­க­ளுக்­கான தனது தூது­வ­ராக இலங்­கையைச் சேர்ந்தவரான  ஜயத்மா விக்­ர­ம­நா­யக்கவை 2017ல்   ஐ.நா. செய­லாளர் நாயகம் நிய­மித்திருந்தார். இவர் தனது 21 ஆவது வயது முதல் சர்­வ­தேச ரீதி­யி­லான இளைஞர் விவ­கார அபி­வி­ருத்திப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ள­துடன் அவ்வமைப்புகளில் பல்­வேறு பதவி நிலை­க­ளையும் வகித்­துள்ளார்.

2030 ஆம் ஆண்­ட­ளவில் ஐக்­கிய நாடு­களின் நிலை­யான அபி­வி­ருத்திக் கொள் ­கையை வெற்­றி­க­ர­மான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­துவதனை  இலக்­கா­கக்­கொண்டு,  இளைஞர் சமூ­கத்தை வலு­வூட்டும் பொறுப்பு குறித்த பதவி மூலம் இவ­ருக்கு வழங்­கப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More