Home இலங்கை கல் வீசி தாக்குபவர் வீட்டில் இருந்து திருட்டு பொருட்கள் மீட்பு

கல் வீசி தாக்குபவர் வீட்டில் இருந்து திருட்டு பொருட்கள் மீட்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீட்டுக்கு அருகால் செல்லும் நபர்களுக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்துபவரின் வீட்டில் இருந்து திருட்டு பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். யாழ். காங்கேசன்துறை பகுதியில் வசித்து வரும் 60 வயதுடைய நபர் ஒருவரின் வீட்டில் இருந்தே இவ்வாறு திருட்டு பொருட்களை மீட்டதுடன் குறித்த நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

காங்கேசன்துறை பகுதியில் வசிக்கும் குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகால் பொதுமக்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்துவதனால் அந்த பகுதியால் எவரும் செல்வதில்லை. இந்நிலையில் குறித்த நபரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகளில் இரவு வேளைகளில் நீரிறைக்கும் மின் மோட்டர்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரங்கள் என்பன திருட்டு போயுள்ளன.

அது தொடர்பில் அயலவர்களுக்கு குறித்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு அது காங்கேசன்துறை காவல்துறையினரிடம்; முறையிட்டனர். முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் வீட்டில் இருந்து 06 மின் மோட்டார்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து குறித்த நபரை கைது செய்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள். நீதிமன்ற உத்தரவில் குறித்த நபர் தற்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More