Home இலங்கை முஸ்லிம் இளைஞர் முஸ்லிம்களுக்கு எதிராகவே சமூக வலைத்தளங்களில் பிரவாரம் செய்தார்…

முஸ்லிம் இளைஞர் முஸ்லிம்களுக்கு எதிராகவே சமூக வலைத்தளங்களில் பிரவாரம் செய்தார்…

by admin

சிங்கள இளைஞர் ஒருவரைப் போன்று முஸ்லிம் இளைஞர் ஒருவரினால் முஸ்லிம்களுக்கு எதிராகவே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தமை, முஸ்லிம் பாடசாலை இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டபோது தெரியவந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று  (27) இடம்பெற்ற அனுராதபுர ஸாஹிரா கல்லூரியின்  பொன் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

உங்களாலும், எங்களாலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களில் தேவையற்ற தகவல்கள் மாணவர்களினால் பரப்பப்பட்டிருந்தன. சிங்கள அமைப்பொன்றைப் போன்று முஸ்லிம் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளங்களை அமைத்திருந்தார். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதுதான் இந்த உண்மை தெரியவந்தது.

அதேபோன்று கைது செய்யப்பட்ட சிங்கள மாணவர்களும் அமைப்பு ரீதியாக செயற்பட்டவர்கள் அல்லர். தான் பெற்றிருந்த தகவல் தொழில்நுட்ப அறிவை இனங்களுக்கிடையில் நல்லுறவை சீர்குழைப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருந்ததையே காண முடிந்தது எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்

பாடசாலையின் பொன்விழாவை முன்னிட்டு பிரதம அதிதியாக ஜனாதிபதி மத்திரிபால சிறிசேனசிறப்பு அதிதியாக அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்கபீ. ஹரிசன்ஷந்தானி பண்டாரரவூப் ஹக்கீம்  வட மத்திய மாகாண முதலமைச்சர் எம்.பி. ஜயசிங்கபாராளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் ரஹ்மான் மற்றும் சந்திம கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More