Home இலங்கை கிளிநொச்சியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனையில் கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கைவிடப்பட்ட மலசலகூடத்திலிருந்து ஒரு தொகை பயன்படுத்த முடியாத வெடிபொருட்கள் இன்று (07.06.2018) பகல் மீட்கப்பட்டுள்ளது.

கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் வளாகத்தை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கைவிடப்பட்ட மலசலகூடத்தில் வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்த மக்கள் தருமபுரம் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைவாக n காவல்துறையினர் நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளனர்.

இதன் போது 12000 தோட்டாக்கள், 04 ஆர்பீஜி எறிகனைகள், 10 ஆகாஸ் குண்டுகள், 05 கிளைமோர் குண்டுகள், 30 டொங்கன் செல்கள், 02 ஜக்கட்கள், 125 82-2 கைக்குண்டுகள், 10 ஆகாஸ் கைக்குண்டுகள், 17 கே 40, 06 எம் 75 கைக்குண்டுகள், 4 கிலோ சீ4 வெடி மருந்து, 550 அடி வயர்கள், என்பன மீட்கப்பட்டுள்ளன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More