Home இலங்கை சிலாபம், மாணவத் தலைவர் படுகொலை, மூன்று மாணவர்கள் சிறுவர் இல்லத்தில் தடுத்து வைப்பு…

சிலாபம், மாணவத் தலைவர் படுகொலை, மூன்று மாணவர்கள் சிறுவர் இல்லத்தில் தடுத்து வைப்பு…

by admin

சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்களையும், எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை, அரச சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறு, சிலாபம் மாவட்ட நீதவான் மஞ்ஜுல ரத்நாயக்க, நேற்றையதினம் (26) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இரவு, சவரான பெரிய முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில், 11ஆம் தரத்தில் கல்வி பயின்ற மொஹமட் ரிஸ்வி மொஹமட் பைசல் என்ற மாணவன் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இக்கொலைக்குக் காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அதே பாடசாலையில், தரம் பத்தில் கல்வி பயின்றுவரும் 15 வயதுடைய மூன்று மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு எதிராக, வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவதினம் இரவு, மத அனுஷ்டான நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு தனது நண்பனொருவனுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வழியில் மறைந்திருந்த சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும், வீதியோர மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு, மாணவன் மீது, பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.

இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவன், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்ற 13 நாட்;களுக்குப் பின்னர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More