Home இலங்கை சம்பந்தனின் விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் –

சம்பந்தனின் விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் –

by admin

மஹிந்த அழைத்து வராவிடினும், உதயங்க வீரதுங்க இலங்கைக்கு கொண்டுவரப்படுவார்…


மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில், நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பவந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆகவே அவரது கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும். முடியுமாகவிருந்தால் அதனை நடமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் உதயங்க வீரதுங்கவை தான் அழைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அப்படியாயின் எங்கே உதயங்க வீரதுங்க? ஏன் மஹிந்த அவரை இன்னும் அழைத்து வரவில்லை. எனினும் அவர் தற்போது டுபாய் காவற்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவர் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More