Home உலகம் முதலமைச்சர் பொய் கூறவில்லை, பொறுப்புகூறும் கடமையிலும் தவறவில்லை..

முதலமைச்சர் பொய் கூறவில்லை, பொறுப்புகூறும் கடமையிலும் தவறவில்லை..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

மாகாண அமைச்சர்கள் 3 பேர் தொடர்பான  கடிதம் தனக்கு கிடைக்கவில்லை. என முதலமை ச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறிய கருத்து உண்மையானது. அவர் பொய் கூறவில்லை, சபைக்கு பொறுப்புகூறும் கடமையிலிருந்தும் அவர் தவறவில்லை. என வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்

வட மாகாணசபையின் 128வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது அமைச்சர் அனந்தியின் துப்பாக்கி விவகாரம் குறித்து பேசப்படும்போதே அவைத் தலைவர் அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் சபையில் தெரிவிக்கையில், இந்த விவாதத்தின்போது எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் ஆளுங்கட்சிக்குள் உள்ள இருவரின் ஒருவர் அப்பட்டமான பொய்யை கூறிக்கொண்டிருக்கிறார்கள் என கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் சி.தவராசா இங்கே இப்படி பொய்தான் கூறப்படுகிறது. என கூறியதுடன் கடந்த அமர்வுக்கு முதல் நடைபெற்ற அமர்வில் முதலமைச்சர் ஆளுநரிடமிருந்து தனக்கு எந்த கடிதமும்  கிடைக்கவில்லை. என கூறிய கருத்து பொய்யானது என்பதை நிரூபித்ததாக கூறினார். இதற்கு பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடந்த அமர்வுக்கு முதல் அமர்வில் அதாவ து 126வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன்  முதலமைச்சரை நோக்கி 3 அமைச்சர்கள் விடயம் குறித்து ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் எழுயிதாக கூறினார். அதனை முதலமைச்சர் நிராகரித்து அவ்வாறன கடிதம் தமக்கு வரவில்லை என கூறினார். அது உண்மை. முதலமைச்சருக்கு 3 அமைச்சர்கள் விடயம் குறித்து கடிதம் அனுப்பபடவில்லை.

ஆகவே முதலமைச்சர் பொய் கூறவில்லை. பொறுப்புகூறும் கடமையிலிருந்து தவறவில்லை. என கூறினார். இதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் சி.தவராசா அவை தலைவருடைய கருத்து சமாளிப்பதாக இருப்பதாக கூறியதுடன்,  அவை தலைவருடைய அந்த கருத்தை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More