Home இந்தியா அரச அலுவலகங்களில் இருந்து, ஜெயலலிதா – எடப்பாடி பழனிசாமி படங்கள் நீக்கம்…

அரச அலுவலகங்களில் இருந்து, ஜெயலலிதா – எடப்பாடி பழனிசாமி படங்கள் நீக்கம்…

by admin

பாராளுமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரச அலுவலகங்களில் இருந்து முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்கள் அகற்றப்பட்டுள்ளனன. பாராளுமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதன் காரணமாக  நேற்று மாலை மத்திய- மாநில அமைச்சர்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த அரச வாகனங்களை திருப்பி ஒப்படைத்துள்ளனர்.

இந்தநிலையிலேயே தலைமை செயலகம் உள்ளிட்ட மாநில அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களும் உடனடியாக அகற்றப்பட்டன. மாவட்ட ஆட்சியர்  அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் இருந்தும் இருவரது படங்களும் அகற்றப்பட்டள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More