Home இலங்கை குண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது!

குண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது!

by admin

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் கடந்த காலத்தைப் போலவே இப்போதும் முரண்பாடுகள் நீடிப்பதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு இவ்விருவரும் இணைந்தே தீர்வை காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை தேர்தலின் ஊடாக தீர்வு காண முடியும் என்று குறிப்பிடுவது அரசியல் கட்சிகளின் அரசியல் நோக்கமாகவே காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குண்டு தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து தீர்வு காண வேண்டும். ஆனால் நடைமுறையில் இத்தன்மை காணப்படுகின்றதா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறினார்.

பொதுத்தேர்தல், அல்லது ஜனாதிபதி தேர்தலின் ஊடாக நெருக்கடிகளை எதிர்க் கொள்ளலாம் என்று குறிப்பிடுவது பொருத்தமற்றது என்றும் தற்போதைய நிலைமையினை எத்தரப்பினரும் தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது முறையற்றதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும் ஆட்சி காலத்தில் கடந்த அரசாங்கத்தின் ஊழல்வாதிகளையும் தண்டிக்கவில்லை. நடப்பு அரசாங்கத்தின் ஊழல்வாதிகளையும் தண்டிக்கவில்லை என்றும் தற்போது இந்த அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார். #மைத்திரிபாலசிறிசேன #குமாரவெல்கம  #ரணில்விக்ரமசிங்க

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More