79
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பதவி விலகும் தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மகிந்த தேசப்பிரிய தனது பதவிவிலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த காலங்களிலும் , அண்மையிலும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. #மகிந்ததேசப்பிரிய #பதவிவிலக
Spread the love