இலங்கை பிரதான செய்திகள்

கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக உத்தியோகத்தர் நாட்டை விட்டு வெளியேறத் தடை


அண்மையில் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் எனதெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவரை இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு அரசாங்கம் உத்தியோகப்பற்றற்ற தடையை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவரது கடத்தல் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை அவர் இலங்கையிலிருந்து வெளியேறுவதை தடை செய்வதற்கான உத்தியோகப்பற்றற்ற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பணியாளரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அவரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முக்கிய அரசவட்டாரங்கள் தெரிவித்தன என டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானநிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம், என்ன நடந்தது என்பதனை உறுதி செய்வதற்கு பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம் அளிப்பது அவசியம் என குறித்த முக்கிய அரசவட்டாரங்கள் தெரிவித்தன எனவும் டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும் இதுவரை பாதிக்கப்பட்டவரின் அறிக்கை தமக்கு கிடைக்கவில்லை என புலனாய்வுத்துறையினர் தெரிவிப்பதாகவும் டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.  #கடத்தப்பட்டு  ,விசாரணை, சுவிட்சர்லாந்து, தூதரகஉத்தியோகத்தர்  ,வெளியேறத்தடை

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.