கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி வந்த புகையிரதம் மோதி இன்று வியாழக்கிழமை காலை நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இன்று காலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிாிழந்தவா் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிய வருகின்றது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.