Home இலங்கை ஜனவரியில் வடக்கில் 557 பேருக்கு கொரோனா தொற்று

ஜனவரியில் வடக்கில் 557 பேருக்கு கொரோனா தொற்று

by admin

வடமாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும் 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும், 46 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்தும் 14 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும், 8 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து வடமாகாணத்தில் இதுவரை 805 கோவிட் -19 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் அதிகபட்சமாக 362 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 221 பேரும், மன்னார் மாவட்டத்தில் 176 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 34 பேரும் முல்லலைத்தீவு மாவட்டத்தில்12 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.


கொரோனா தொற்று ஆரம்பமான காலம் முதல் இன்று வரை வடமாகாணத்திலே கோவிட் -19 நோயால் மூன்று இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.மன்னார் மாவட்டத்தில் இரு இறப்புக்களும் வவுனியா மாவட்டத்தில் ஒரு இறப்பும் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை  2021 ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 11 ஆயிரத்து 329 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 4 ஆயிரத்து 626 பேரின் மாதிரிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன  என்றுள்ளது #ஜனவரி #வட_மாகாணத்தில் #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More