
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வந்த அரசாங்கம் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சி 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே பிரதான யோசனையாக குறிப்பிடப்பட்ட போதும் தற்போது வரை 3 ஆண்டுகாலமாக தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்துள்ளது என மக்களுக்கு தெரிந்துள்ளது
இந்நிலையில் தற்போது நாட்டில் தேசிய பாதுகாப்பு இருக்கின்றதா என அரசாங்கத்திடம் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்
Spread the love
Add Comment