இலங்கை பிரதான செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளை காரில் கடத்தி சென்ற மூவர் கைது

ஹெரோயின்  போதைப்பொருளை காரில்  கடத்தி சென்ற 3  சந்தேக நபர்களை   கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (23)  அதிகாலை சம்மாந்துறை   காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அம்பாறை  -கல்முனை பிரதான  வீதி  மல்வத்தை பிள்ளையார் கோவில் அருகில்    வைத்து   சந்தேக நபர்கள் மூவரும்     விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகினர்.

இவ்வாறு கைதான நபர்கள் அம்பாறை நகர் பகுதியைச் சேர்ந்த  33, 37 , 38  வயது  மதிக்கத்தக்கவர்களாவர்.அத்துடன் சந்தேக நபர்கள் பயணம் செய்த கருப்பு நிற கொரோல்லா கார்  அவர்கள்  வசம் இருந்த ஹெரோயின்  போதைப்பொருள் 06 கிராம் 840 மில்லிகிராம்   தொகுதி பணம் என்பன  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள்  சான்று பொருட்களுடன் சம்மாந்துறை   காவல்துறையினரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியுள்ளனா்.

இச்சம்பவத்தில் தொடர்பு பட்ட சந்தேக நபர்கள் மூவரும்  இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் பிரதான முகவர்களாக  செயற்பட்டு வந்துள்ளதாக  விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.