Home இலங்கை இசைக்கலைஞாின் கத்திக்குத்தில் சிறுவன் உயிாிழப்பு

இசைக்கலைஞாின் கத்திக்குத்தில் சிறுவன் உயிாிழப்பு

by admin

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொஸ்மோதர காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட வரெல்ல இலுக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரபல இசைக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கும் அவர் திருமணம் முடித்துள்ள இரண்டு பிள்ளைகளின் தாயாருக்குமிடையே வீட்டுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட ஏற்பட்ட வாக்குவாதம் , மோதலாக மாறிய போது குறித்த நபர் தனது மனைவியை கத்தியால் குத்த முயன்ற போது குறித்த பெண்ணின் 10 வயது மகனின் தலையில் கத்திக் குத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுவன் மொரவக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றுக்காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மொரவக, வெலிவ பகுதியில் உள்ள பௌத்த பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு கல்வி கற்கும் சதேவ் மெத்சர என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் பிரபல இசைக்குழு ஒன்றின் பாடகரும் வாத்தியக் கலைஞருமான நபர் , இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை காவல்துறையினா் இன்று காலை கைது செய்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More