Home இலங்கை வசீம் தாஜூடீனின் சகோதரரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது

வசீம் தாஜூடீனின் சகோதரரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் மரணமான சமப்வம் தொடர்பில் அவரது சகோதரரிடம் வாக்கு மூலமென்று பதிவு செய்யப்பட உள்ளது.தாஜூடீன் மரணம் குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் நடைபெற்ற  போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் முன்னாள் நாரஹேன்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் பெரேரா ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாஜூடீனின் சகோதரரிடம் விசாரணை செய்யப்பட உள்ளது. நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அனுர சேனாநாயக்க, சுனில் பெரேரா ஆகிய இருவரையும் எதிர்வரும் 6ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More