Home உலகம் அரசாங்கத்திற்கு ஆதரவான முஸ்லிம்கள் கொல்லப்படுவதாக மியன்மார் அரசாங்கம் குற்றச்சாட்டு

அரசாங்கத்திற்கு ஆதரவான முஸ்லிம்கள் கொல்லப்படுவதாக மியன்மார் அரசாங்கம் குற்றச்சாட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கத்திற்கு ஆதரவான முஸ்லிம்கள் கொல்லப்படுவதாக மியன்மார் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மியன்மாரின் ராகீன் மாநிலத்தில் இன்றைய தினம் நபர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும்  செயற்படும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதாக மியன்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் வாழ்ந்து வரும் ரொஹினியா முஸ்லிம்கள் வெளிநாட்டுப் படையினருக்கு ஆதரவளித்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை, அரச படையினர் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டு வருவதாக ரொஹினியா முஸ்லிம்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More