Home பிரதான செய்திகள்ரொனால்டோவிற்காக 250 மில்லியன் பவுண்ட்ஸ் வழங்கத் தயாரகவுள்ள சீன கழகம்

ரொனால்டோவிற்காக 250 மில்லியன் பவுண்ட்ஸ் வழங்கத் தயாரகவுள்ள சீன கழகம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


உலகின் முதல் தர கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியோனோ ரொனால்டோவிற்காக 250 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்களை வழங்க சீன கழகமொன்று தயாராக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

ரொனால்ட்டோ தற்பொழுது ரியல் மட்ரீட் கழகத்தின் சார்பில் விளையாடி வருகின்ற நிலையில்  ரியல் மட்ரீட் கழகத்திற்கு 250 மில்லியன் பவுண்ட்களை வழங்குவதற்கும் இந்த கழகம் இணங்கியுள்ளதாக ரொனால்டோவின் முகவர் தெரிவித்துள்ளார்.

31 வயதான போர்துகல் கழகத்தின் தலைவர் ரொனால்டோ உலகின் முதனிலை கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருடாந்தம் 85 மில்லியன் பவுண்ட்கள் சம்பளத்துடன் ரொனால்டோவை அணியில் இணைத்துக் கொள்ள இந்த சீனக் கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த பெயர் குறிப்பிடாத கழகத்தில் இணைந்து விளையாடுவதற்கு ரொனால்டோ விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது முகவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More