Home இலங்கைபயங்கரவாதத்தை இல்லாதொழிக்க சகல வழிகளிலும் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க சகல வழிகளிலும் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க சகல வழிகளிலும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் அனைத்து வகையிலான பயங்கரவாத நடவடிக்கைகளையும் இல்லாதொழிக்க பிராந்திய வலய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிராந்திய வலயத்தில் மனித பாதுகாப்புக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பினை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அறிவை மையமாகக் கொண்ட போட்டி மிகு சந்தையொன்றை உருவாக்குவதே இலங்கையின் நோக்கமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி   பிராந்திய வலயத்தில் தொழில்நுட்ப அறிவு கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More