Home இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாளராக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் செயற்படுகின்றார்

அரசாங்கத்தின் பொறுப்பாளராக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் செயற்படுகின்றார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

அரசாங்கத்தின் பொறுப்பாளராக தற்போது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பெல்ஜியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, நாட்டு அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் பதவியை தற்போது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி, பிரதமர் அல்லது சபாநாயகர் நாடு திரும்பும் வரையில் ஸ்ரீபவன் இந்தப் பொறுப்பினை வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More