Home இலங்கை படுக்கையிலிருக்கும் நோயாளிகளை பராமரிக்கும் புதிய செயற்திட்டம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பம்.

படுக்கையிலிருக்கும் நோயாளிகளை பராமரிக்கும் புதிய செயற்திட்டம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பம்.

by admin

யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்திட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

 z

இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது. அதனடிப்படையில் எமதுமாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்வேண்டிய தேவை எழுந்துள்ளது. எமது மாகாணத்தில் இந்த கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்கமுடியாமல் வீடுகளில் உள்ளனர். இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம். எனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லை. மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலசிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களி;ல் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன்கருதியே இந்த செய்ற்திட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.

 cc

இந்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்க விஜயம் செய்தபோது புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டுநிறுவனங்களினூடாகவே இந்த செய்ற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம். எதிர்காலத்தில் இந்த செயற்திட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர், மற்றும் உதவியாளர் ஒருவர் இடம்பெறுவர். இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு களவிஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவர் என்று தெரிவித்தார்.

dd

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More