Home இந்தியாதமிழகத்தின் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நவம்பர் 19-ம் திகதி தேர்தல் :

தமிழகத்தின் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நவம்பர் 19-ம் திகதி தேர்தல் :

by admin

தமிழகத்தின் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே 16-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் பேரவைத் தொகுதிகளில வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டமை காரணமாக  தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்திருந்தது.

tamil-nadu-election

மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ்.எம். சீனிவேல் மரணமடைந்தமையால் அங்கும் தேர்hல் நடத்த வேண்டியுள்ளமதால் குறித்த தொகுதிகளில் நவம்பர் 19-ம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும்  வாக்கு எண்ணிக்கை நவம்பர் 22ம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More