Home உலகம் ஈராக்கிய மக்கள் சிரியா மற்றும் துருக்கி நோக்கி இடப்பெயர்வு

ஈராக்கிய மக்கள் சிரியா மற்றும் துருக்கி நோக்கி இடப்பெயர்வு

by admin


ஈராக்கிய மக்கள் சிரியா மற்றும் துருக்கி நோக்கி இடம்பெயரக் கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கின் மொசுல் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அரசாங்கப் படையினர் நடத்தி வரும் தாக்குதல்களினால்  இவ்வாறு அங்குள்ள மக்கள் இடம்பெயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ஒரு லட்சம் மக்கள் சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் நோக்கி இடம்பெயரலாம் எனவும் இடம்பெயரும் ஈராக்கிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்க 61 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளானவர்கள் மற்றும் அண்டை நாடுகளில் இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான கூடாரங்கள், முகாம்கள் மற்றும் குளிர்கால அங்கிகள், அடுப்புகள் உள்ளிட்ட பொருட்களை வழங்க இவ்வாறு நிதி தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More