Home இலங்கை பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த சுவிட்சர்லாந்து உதவி வழங்க உள்ளது

பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த சுவிட்சர்லாந்து உதவி வழங்க உள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து உதவி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் தலைவர் Christa Markwalder  இதனைத் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம், பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கு உதவிகள் வழங்கப்படும் என இலங்கைப் பாராளுமன்றக்குழுப் பிரதிநிதிகளை சந்தித்த போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவிற்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்து பாராளுமன்ற முறைமை மற்றும் கட்டமைப்பு குறித்து அந்நாட்டுப் பிரதிநிதிகள் இலங்கைப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளனர். இதேவேளை, இலங்கையின் பாராளுமன்றத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெளிவுபடுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More