Home உலகம் ஐஎஸ் தீவிரவாதிகள், 19 எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்துள்ளனர்-

ஐஎஸ் தீவிரவாதிகள், 19 எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்துள்ளனர்-

by admin


ஈராக் நகரான மொசூலின் தெற்கு திசையில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து பின்வாங்கிய ஐஎஸ் தீவிரவாதிகள், 19 எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்துள்ளனர் எனவும் அங்குள்ள மக்கள் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் இதன் காரணமாக பல விலங்குகள் உயிரிழந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிந்துக் கொண்டிருக்கும் எண்ணெய் கிணறுகளிலிருந்து வரும் புகை மாசு காரணமாக அங்குள்ள கால்நடைகளை கறுப்பாக தோற்றமளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொசூலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் 6 எண்ணெய் கிணறுகளை ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற நிலையில் அவற்றுக்கும் தீ வைக்க கூடுமோ என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More