Home இலங்கை அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை – ஹர்ஸ டி சில்வா

அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை – ஹர்ஸ டி சில்வா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிலைப்பாட்டில் மாற்றமில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கியின் அப்போதைய ஆளுனர் பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும்இ சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட முறைப்பாட்டில் தாமும் கையொப்பமிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொய் சொல்லத் தேவையில்லை எனவும் ஒரு பொய்யை மறைக்க மற்றும் பொய்களை சொல்ல நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இதனால் பாரிய பாதிப்புக்களே ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More