Home இலங்கை முக்கிய அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு

முக்கிய அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி செல்வதாக குற்றப் புலானாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த முக்கிய அமைச்சரும், அவரது சகோதரரும் சில வர்த்தகர்களும் இணைந்து இவ்வாறு தங்கம் கடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த அமைச்சருக்கும்  அமைச்சரின் சகோதரருக்கும் எதிராக காணி அபகரிப்பு தொடர்பில் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் உத்தியோகபூர்வ வாகனங்களில் தங்கம் கடத்தப்பட்டு விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாக புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆகாய வழியாகவும், கடல் வழியாகவும் இந்த அமைச்சர் தலைமையிலான கும்பல் பாரியளவில் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி செல்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்னதாக இந்த அமைச்சர் உள்ளிட்ட கும்பல் படகு மூலம் கடல் வழியாக 50 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தை இந்தியாவிற்கு கடத்த மேற்கொண்ட முயற்சியை கடற்படையினர் முறிடியத்திருந்தனர். எனினும் இந்த அமைச்சருக்கு எதிராக நடவடிக்கைகள் எதுவும் எடுக்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More