Home இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த புலி உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த புலி உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய பட்டியலை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம், இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி இந்த பட்டியலை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த சில தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான வழக்கு விசாரணையின் போது, சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம், இராணுவப் படைக்கு உத்தரவிட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More