Home உலகம்ஆயிரக் கணக்கான மக்கள் மொசூல் நகரிலிருந்து இடம்பெயர்வு

ஆயிரக் கணக்கான மக்கள் மொசூல் நகரிலிருந்து இடம்பெயர்வு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆயிரக் கணக்கான மக்கள் மொசூல் நகரிலிருந்து இடம்பெயர்ந்து வருவதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஆதரவு படையினர் மொசூலில் நிலை கொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரை விடுவித்துக்கொள்ளும் நோக்கில் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஈராக்கியர்கள் மொசூலிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த மோதல் சம்பவங்களின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின்; உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More