Home இலங்கை இந்திய பாதுகாப்பு கரிசனைகளை உதாசீனம் செய்ய முடியாது – சரத் பொன்சேகா

இந்திய பாதுகாப்பு கரிசனைகளை உதாசீனம் செய்ய முடியாது – சரத் பொன்சேகா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளை உதாசீனம் செய்ய முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு மற்றும் புவியியல்சார் அரசியல் போன்ற காரணிகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் பிராந்திய வலயத்தின் பலம்பொருந்திய நாடு இந்தியாவே என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பாதுகாப்பு விவகாரம் என்றால் இந்தியாவே பிராந்திய வலயத்தின் முதன்மை நாடு எனவும்  அதில் மாற்றமில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்திய பாதுகாப்பு விவகாரங்களை உதாசீனம் செய்துவிட முடியாது எனவும் இந்த விடயங்களை இலங்கை மிகத் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டங்களில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா உலகின் பல நாடுகளுடன் இலங்கை வரலாற்று ரீதியான நட்புறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More