அரசியல் தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது தமிழர் பொங்கல் விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழர் உரிமைக்காக தங்களது பங்களிப்புக்களைச் செய்திருக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் விகிதாசாரம் கணிசமாகக் குறைந்திருக்கின்றது எனவும் இதற்குக் காரணம் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கிழக்கிலங்கையில் குடியேற்றப்பட்டமையே எனவும் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 70 வருடங்களாக பேச்சுக்கள் இடம்பெற்றுள்ள போதும் நாட்டுக்கு ஒரு நிரந்தரமான நியாயமான அரசியல் தீர்வு ஏற்படவில்லை எனவும் தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது எனவும் அதை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.