Home இலங்கை ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படாது – சுஜீவ சேனசிங்க

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படாது – சுஜீவ சேனசிங்க

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படாது என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக காவல்துறையும், நீதிமன்றமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் எனவும் தற்போதைய அரசாங்கம் எந்த வகையிலும் நீதிமன்ற விசாரணைகளில் தலையீடு செய்யாது என தெரிவித்துள்ள அவர் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நீதிமன்ற விசாரணைகளில் தலையீடு செய்யப்பட்டது எனவும்  தற்போதைய அரசாங்கம் அவ்வாறு தலையீடு செய்யாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வசீம் தாஜூடினின் கொலை வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ள சுஜீவ  இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பது இரகசியமானதல்ல எனவும் இந்தக் கொலையுடன் மஹிந்த ராஜபக்ஸக்களுக்கு  தொடர்பு உண்டு எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More