Home இலங்கை இந்தியாவுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக இலங்கை அறிவிப்பு

இந்தியாவுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக இலங்கை அறிவிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்தியாவுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக நீண்ட காலமாக உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து  இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தனது அறிமுக ஆவணத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார். தரஞ்சித் சிங் சந்து ஓர் தொழில்சார் ராஜதந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளில்  தரஞ்சித் சிங் சந்து  பல்வேறு ராஜதந்திர பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More