Home இலங்கை இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு அவசியமானது

இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு அவசியமானது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு மிகவும் அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மஹரகமவில் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற அமர்வுகளில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டை விற்பனை செய்வதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை எனவும் இந்த நாட்டிலிருந்து எவரும் நீக்கப்பட மாட்டார்கள் எனவும்  குறிப்பிட்டுள்ள அவர் முதல் தர வர்த்தகர்களிடம் உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

சரியான வகையில் முதலீடு செய்யப்பட்டால் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்ல வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ள பிரதமர் கொழும்பை அபிவிருத்தி செய்வது மட்டும் அரசாங்கத்தின் திட்டமல்ல எனவும் ஹம்பாந்தோட்டையும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More