Home இலங்கை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரை பாதுகாக்குமாறு வடக்கு முதல்வர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரை பாதுகாக்குமாறு வடக்கு முதல்வர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரை பாதுகாக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடிதம் ஒன்றின் மூலமாக விக்னேஸ்வரன், ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் போராட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன உறவுகளின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே போரட்டம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சிறுமி ஒருவர் பற்றிய தகவல்களைக் கோரி அவரது தயார் போராடி வருவதாகவும் குறைந்தபட்சம் இந்தக் கோரிக்கைக்கேனும் முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More