Home இந்தியா அற்புதம்மாள் தமிழக முதலமைச்சரை சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

அற்புதம்மாள் தமிழக முதலமைச்சரை சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

by admin


தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நேற்றையதினம்  சந்தித்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தனது மகன் உள்ளிட்டோரை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என முன்னாள்  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிடம் அற்புதம்மாள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகம்  சென்று இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தனது மகன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2 முறை அறிவித்த போதும்  அது தடைபட்டுவிட்டது எனவும் இனிமேலும் தடையாகக் கூடாது எனவும்   அவர்களது விடுதலைக்கு முயற்சி எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாகவும்  அதற்கு முதலமைச்சர்  வழங்கிய  பதில் தனக்கு திருப்தியாக இருந்தது எனவும்  நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More