Home உலகம் துருக்கியில் பணி நீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் 40 பேர் ஜெர்மனியில் தஞ்சம் கேட்டுள்ளனர்:-

துருக்கியில் பணி நீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் 40 பேர் ஜெர்மனியில் தஞ்சம் கேட்டுள்ளனர்:-

by admin

துருக்கியில் புரட்சியில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் 40 பேர் ஜெர்மனியில் தஞ்சம் கேட்டு மனு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ‘நேட்டோ’ படை பிரிவில் பணியாற்றியவர்கள். ஆனால் அவர்களுக்கு தஞ்சம் அளிப்பது குறித்து, ஜெர்மன் அரசாங்கமும், நேட்டோ அதிகாரிகளும் எந்த கருத்தும் வெளியிடவில்லை.

துருக்கியில் கடந்த ஜூலை மாதம் அதிபர் ரீசெப் தயீப் எர்டோகனுக்கு எதிராக ராணுவ புரட்சி இடம்பெற்றது. ஆனால் அது பொதுமக்கள் உதவியுடன இந்தப் புரட்சி; முறியடிக்கப்பட்டது. அதனையடுத்து புரட்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், பொலீசார் மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பதவி நீக்கமும் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் விரைவில் துருக்கி செல்ல உள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More