Home உலகம் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்படவிருந்த நிலக்கீழ் புகையிரத போக்குவரத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது

இங்கிலாந்தில் மேற்கொள்ளப்படவிருந்த நிலக்கீழ் புகையிரத போக்குவரத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது

by admin

இங்கிலாந்தின்   தேசிய புகையிரத  மற்றும் நீர்ப் போக்குவரத்துத் தொழிற்சங்கம்  அறிவித்திருந்த நிலக்கீழ்  புகையிரத போக்குவரத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்  5 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் 8 ஆம் திகதி புதன்கிழமை  வரை வேலை நிறுத்தம் மேற்கொள்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்றைதினம் நிலக்கீழ் புகையிரதசேவை சேவை  நிறைவேற்றதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை  அடுத்து தமது வேலை நிறுத்தத்தை கைவிட்டுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத  போக்குவரத்துச் சேவைப் பணியாளர்கள் குறைக்கப்படுவதற்கும், நிலையப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை தரும் பயணச் சீட்டு நிலையங்கள் மூடப்படுவதற்கும் எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More