Home உலகம் டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் இடைக்கால தடை

டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் இடைக்கால தடை

by admin

டொனால்டு டிரம்ப்பின்  உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய  ஜனாதிபதியாக  பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அண்மையில்  ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்திருந்ததுடன்  சிரியா அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கும்  நிரந்தர தடை விதித்தார்.

இந்த நிலையில் சீட்டில் பெடரல் நீதிமன்றில் டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு எதிராக வோஷிங்டன் சட்டமாஅதிபர் பொப் பெர்குசன் (Bob Ferguson) வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்  டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் இடைக்கால தடை விதித்துள்ளது.

டிரம்ப்பின்  இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என  வலியுறுத்தி அமெரிக்காவின் கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வோஷிங்டன் உள்ளிட்ட பல மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில்  வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில்  சில நீதிமன்றங்கள்  இடைக்கால தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More