Home இலங்கை மே மாதம் பிரதமர் சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளார்

மே மாதம் பிரதமர் சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


எதிர்வரும் மே மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளார். சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நோக்கில் அவர் இவ்வாறு சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் போன்றே இந்தியாவுடனும் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சீனாவுடன் கடந்த 65 ஆண்டுகளாக வர்த்தக உறவுகளை இலங்கைப் பேணி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இரு தரப்பு உறவுகளுக்கு 65 ஆண்டுகள் பூர்த்தியாவதனை கொண்டாடுவதற்கான சரியான வழியாக இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பிரதமர் சீனாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More