Home இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றைய தினம் நாடு தழுவிய அடிப்படையில் அடையாள பணிப் புறக்கணிப்பில்  ஈடுபடவுள்ளனர். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிங்சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட வகையில் கடந்த ஜனவரி மாதம் அரசாங்கம் தமக்கு சம்பளத்தை உயர்த்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று நாடுமுழுவதும் அடையாள பணி புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிரிலும் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More