Home இலங்கை மலையகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீளவும் வாய்ப்பு

மலையகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீளவும் வாய்ப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மலையகப் பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீளவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மலையக கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றுக் கொண்டாலும் தரமான சேவையாற்றக்கூடிய பல ஆசிரிர்கள் பலர் இருப்பதாகவும் இவர்களின் சேவையை மலையக பெருந்தோட்ட பாடசாலை மாணவ மாணவியருக்கு  முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More