Home இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை – உலக வங்கி

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை – உலக வங்கி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி குறித்து கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் மத்திய வங்கி வெளியிடவில்லை எனவும் உலகவங்கி  சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகளின் ஊடாக அரசாங்கத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படவில்லை என சில ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், செய்திகளில் உண்மையில்லை என மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுமாறு உலக வங்கியிடம் பிரதமர் கோரியிருந்தார் எனவும், இந்த கொடுக்கல் வாங்கல்களில் மத்திய வங்கிக்கு எவ்வித நட்டமும் ஏற்படவில்லை என உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More