Home இலங்கை மாலபே சைட்டம் தனியார் மருத்துவப் கல்லூரி தொடர்பில் ஆராய விசேட நிபுணர் குழு நியமனம்:-

மாலபே சைட்டம் தனியார் மருத்துவப் கல்லூரி தொடர்பில் ஆராய விசேட நிபுணர் குழு நியமனம்:-

by admin

சர்ச்சைக்குரிய மாலபே சைட்டம் தனியார் மருத்துவப் கல்லூரி தொடர்பில் ஆராய்வதற்கு விசேட நிபுணர் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட நிபுணர் குழுவை நியமிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தரப்பில் சைட்டம் பல்கலைக்கழகத்திற்கான தீர்வுத் திட்டமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More