Home இலங்கை கேப்பாப்பிலவுக்கு சர்வமத குழுவினர் இன்று செல்கின்றனர்:-

கேப்பாப்பிலவுக்கு சர்வமத குழுவினர் இன்று செல்கின்றனர்:-

by admin

இன்றுடன் 15 நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, காலியிலிருந்து சர்வமத குழுவொன்று இன்று கேப்பாப்பிலவிற்கு செல்கின்றனர்.

கேப்பாப்பிலவில் தற்போது மழை பெய்து வருவதால், குழந்தைகளுடன் இம் மக்கள் பெரும் துன்பங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இம் மக்களுக்கு ஆதரவாகவும் ராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி புதுக்குடியிருப்பு மக்கள் நடத்திவந்த சத்தியாக்கிரக போராட்டம், 12ஆவது நாளான இன்று காலை முதல் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டமாக மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More